Social Icons

Pages

Monday, February 09, 2009

இரண்டாம் சூர்யவர்மனின் Beng Mealea ஆலயம்


நான் முன்னர் சொன்ன பதிவில் சொன்னது போல சியாம் ரீப் நகரைக் கடந்து கிராமப்புறங்களை அண்டியதான கோயில்களுக்கு எமது உலாத்தல் தொடர்ந்தது. பொதுவாக கம்போடியாவிற்கு வருபவர்கள் பலர் செய்யும் தப்பு இங்கேயுள்ள அங்கோட் வாட் ஆலயத்தையும், அதனைச் சூழவுள்ள ஒரு சில ஆலயங்களையும் பார்த்தால் போதுமென்று. ஆனால் நாலைந்து நாட்கள் மேலதிகமாகச் சிரமமெடுத்தால் இந்தக் கம்போடிய நாட்டின் வரலாற்றுத் தொன்மை மிக்க இன்னும் பல ஆலயங்களைக் காணும் பாக்கியம் பெறுவதோடு, அந்தக் காலத்தில் நம் இந்து மதத்தின் செழுமையையை இவ்வகையான வரலாற்றுச் சுவடுகளினூடே கண்டு வியக்கவும் முடியும்.

அந்த வகையில் நாம் அடுத்துச் சென்ற ஆலயம் இரண்டாம் சூர்யவர்மனால் கி.பி 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட Beng Mealea. சியாம்ரீப் நகரில் இருந்து 77 கி.மீ தொலைவில் இருக்கும் இவ்வாலயம் ஒரு இந்துக் கோயிலாக நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு பெரும் புதர் நடுவே இருக்கும் இவ்வாலயப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகளின் மிகக் குறைந்த கவனத்தையே ஈர்த்துள்ளது. அழிந்த சுவடுகளோடு பெரும் பற்றைகளுக்கு மத்தியில் இடிபாடுகளாய், மரஞ்செடிகள் முளைத்தெழுந்த ஆலயமாக இருக்கின்றது.

மேலே படத்தில் ஆலயத்தினை அண்டிய நீர்ச்சுனையில் விளையாடும் பன்றிகள்
மேலே படத்தில் ஆண்டவனுக்கு ஷம்பெயின் போத்தல்களைக் காணிக்கையாக்கியிருக்கிறார் அன்பர் ஒருவர்.

மேலே படத்தில் புதரும், ஜேர்மனி உதவியோடு மிதிவெடி அகற்றும் பணித்திட்டம் குறித்து அறிவிப்புப் பலகையும்

இந்த ஆலயத்துக்கான தனி நுழைவுக்கட்டணமாக ஐந்து அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றன. முழுமையாக விஷ்ணு பகவானுக்கான கோயிலாகவும், அங்கோர் வாட் கட்டிட வகைக்குள் கட்டிட வல்லுனர்களால் இது வகைப்ப்படுத்தப்பட்டிருக்கின்றது. முன்னர் பொல் பொட்டின் படைகளுக்கும், வியட்நாமுக்கும் இடையிலான போரின் போது மிதிவெடிகள் பல புதைக்கப்பட்டு இப்போது தான் அவற்றை ஜேர்மன் நாட்டின் உதவியோடு அகற்றியிருக்கின்றார்கள். நான்கு நூலகங்கள் அமைக்கப்பட்டிருந்திருக்கின்றன.


மேலே படத்தில் மிதிவெடி அகற்றிய பகுதி ஒன்று
மேலே படத்தில் நாகதலைகள் கொண்ட சிலை
மேலே படத்தில் கிருஷ்ண பகவான்
மேலே படத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் காட்சி
மேலே படத்தில் வெள்ளையானையின் மேல் இந்திரன் சிற்பம்

பாற்கடலைக் கடையும் காட்சி, இந்திரன், கருட பகவான் உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. நீர்த்தடாகம் ஒன்றும் ஆலயச்சூழலில் இருந்திருக்கின்றது. இப்போது வெறும் வரண்ட பிரதேசமாகவே இருக்கின்றது.

மேலே படத்தில் பிரஞ்சுக்காரர்களால் களவாடப்பட்ட நகைப்பெட்டகம் சிதைந்த நிலையில்

நகைகள் போன்ற ஆபரணங்களைப் புதைத்து ஆலயத்தினை எழுப்பும் வழக்கம் இங்கேயும் பின்பற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் பின்னாளில் ஆட்சி செய்த பிரஞ்சுக்காரர்கள் இவ்வாலயத்தைக் கண்டு பிடித்தபோது அந்தப் புதையலைத் திருடி விட்டார்கள்.

மேலே படத்தில் கோயில் காவற்பணியில் இருக்கும் பெண் நீர்ச்சுனையில் அகப்பட்ட தவளையைக் கையில் ஏந்தித் தன் உணவாக்கக் காத்திருக்கிறாள்

மேலே படத்தில் இடமிருந்து வலம், எமது கார்ச்சாரதி, அவருக்குப் பக்கத்தில் சுற்றுலா வழிகாட்டி

Beng Mealea ஆலயத்தின் தரிசனம் முடிந்து எமது அடுத்த உலாத்தலுக்கு முன்னர் ஆலயச் சூழலில் இருந்த உணவு விடுதியில் மதிய உணவை எடுத்துக் கொண்டோம். சுற்றுலா வழிகாட்டி நூடில்ஸை சுவைத்துக் கொண்டே சொன்னார் "இந்தப் பகுதி தாய்லாந்து நாட்டின் எல்லைக்கு அண்மித்ததாக இருப்பதால் அந்த நாட்டில் தயாராகும் உணவுவகைகள் இங்கே தாராளமாகக் கொண்டு வரப்பட்டு விற்பனையாகின்றன. இந்த நூடில்ஸும் வழக்கத்தை விட மிகவும் சுவையாக இருப்பதற்குக் காரணம், இவை தாய்லாந்திலிருந்து வந்திருப்பதால் தான்" என்று சொல்லிக் கொண்டே உறிஞ்சினார் நூடில்ஸ் கலவையை.

Beng Mealea ஆலயச் சூழலைக் காட்டும் மேலும் சில படங்கள்



உசாத்துணை:
கம்போடிய சுற்றுலாக் குறிப்புகள்
கம்போடிய சுற்றுலாவழிகாட்டி

5 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அந்த காலத்தில் மிக அழகான இடமாக இருந்திருக்க்கும்.. அநியாயத்துக்கு உடைந்திருக்கிறது..

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி

வலைப்பூக்கள் நண்பருக்கு

இணைப்புக்கு நன்றி

கோபிநாத் said...

யப்பா...எவ்வளவு கஷ்டப்பட்டு செய்திருப்பாங்க!!!

உங்கள் பதிவுகள் அனைத்தும் ஒரு வழிகாட்டியை போல அமைந்திருக்கிறது தல

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி தல‌