Social Icons

Pages

Sunday, April 27, 2008

கைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்னர்கள்


கடந்த பதிவில் கம்போடியா நாட்டின் கைமர் பேரரசில் விளங்கிய பல்லவ மன்னர்களில் முதற் தொகுதியைக் கொடுத்திருந்தேன். இன்றைய பதிவில் அதன் தொடர்ச்சியாக மற்றைய மன்னர்களைப் பார்போம்.

சூர்யவர்மன்(Surya varman )

ஆட்சிக்காலம்: கி.பி 1002 - 1050

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர (Yashodapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

KHLEANG


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

South Khleang, Phimanckas, Takeo, phom sadak, Preah Khan, Prasat Preah Vihear on Dangrek Mountain, and Prasat Phimeanakas

இவனது ஆட்சியில் பெளத்த மதம் எழுச்சியும், செழிப்பும் கொண்டு விளங்கியது. ஆனாலும் இந்து மதத்தைப் பேணுபவர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்தான். நாற்பது ஆண்டுகள் இவன் தொடர்ச்சியாக ஆண்ட காரணத்தால் ஸ்திரமான அரசையும், பொருளாதார மேம்பாட்டையும் சிறப்பாகச் செய்தான்.

இறந்த பின் பிறீ நிர்வாண பாத (Preah Nirvanapada) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.


இரண்டாம் உதய ஆதித்யவர்மன் (Udayaditya varman II )

ஆட்சிக்காலம்: கி.பி 1050 - 1066

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர (Yashodapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

BAPHUON


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Baphuon , West Mabon

Baphuon ஆலயத்தின் உள்ளே தங்கத்தில் சிவலிங்கத்தை இவன் எழுப்பினான்.

2KM நீளமான மேற்கு பராய் (West Baray) என்ற நீர்த்தேக்கத்தை அமைத்தான்.

தொடர்ந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றிருக்கின்றது.


இரண்டாம் சூரியவர்மன்(Surya varman II )

ஆட்சிக்காலம்: கி.பி 1113 - 1150

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர (Yashodapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

ANGKOR WAT


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Angkor Wat, Thom Manon

கைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான்.

இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான்.

தொடர்ந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றிருக்கின்றது.

ஏழாம் ஜெயவர்மன்(Jeya varman VII )

ஆட்சிக்காலம்: கி.பி 1181 - 1218

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

அங்கோர் தொம் (Angkor Thom)


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Angkor Thom, Bayan, Preah Khan, Prasat Chrun

இவனது தந்தை பெயர் இரண்டாம் தரனிந்திரவர்மன் (Dharanindravarman II), தாய் ஜெயராஜசூடாமணி (Jeyarajacudamani)

இந்த ஏழாம் ஜெயவர்மன் தனது மனைவி ஜெயதேவி இறந்தபின் அவளின் சகோதரி இந்திரதேவியை மணம் முடித்தான். இரண்டாவது மனைவியான இந்திரதேவி பெரும் புத்த பிரச்சாரகி. எனவே ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் முன்பை விட பெளத்த மதத்தின் ஆதிக்கம் பெரும் எழுச்சி கொண்டு விளங்கியது. அதன் தாக்கம் இன்று வரை தொடர்கின்றது. இது குறித்து விரிவான பார்வையை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் 121 தங்குமிடங்கள் (Rest houses)102 வைத்தியசாலைகள் ஆகியவையும் கட்டப்பட்டனவாம். இவன் காலத்தில் மகாஜன பெளத்தம் என்ற பிரிவே பின்பற்றப்பட்டது.

இவன் இறந்த பின் மஹாபரம செளகத (Mahaparama saugata) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.

இவ்வாறாக கைமர் பேரரசில் முக்கியமான பல்லவ மன்னர்கள் விபரம் அங்கோர் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. ஆனால் மேற்குறித்த ஆண்டு எல்லைக்குள்ளும், ஆண்டு எல்லைக்கு அப்பாலும் இன்னும் பல பல்லவ மன்னர்கள் இடைப்பட்ட காலத்தில் குறுகிய கால ஆட்சியை மேற்கொண்டிருக்கின்றார்கள். அது குறித்த முழுப்பார்வையையும் விக்கிபீடியாவின் தகவல் களஞ்சியம் இங்கே பட்டியலிடுகின்றது. ஆனால் தற்போதைய வரலாற்று ஆர்வலர்களுக்கு நான் முன் சொன்ன பட்டியலே பெரிதும் தேவைப்படுகின்றது.

இந்தப் பதிவுடன் கைமர் பேரரசின் மன்னர்கள் குறித்த பார்வை முடிவுற்றது. தொடர்ந்து வரும் பகுதிகள் இந்த மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டிய ஆலயங்கள், நினைவிடங்கள் குறித்த பார்வையாக இருக்கின்றது. இதுவரையும், தொடர்ந்து வரும் பகுதிகளிலும் எடுக்கப்பட்டவை என் சொந்தப் புகைப்படத் தொகுதிகளாகும்.

8 comments:

கோபிநாத் said...

மன்னர்கள் அனைவரும் பக்திமான்கள் போல!!

\\இந்தப் பதிவுடன் கைமர் பேரரசின் மன்னர்கள் குறித்த பார்வை முடிவுற்றது. தொடர்ந்து வரும் பகுதிகள் இந்த மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டிய ஆலயங்கள், நினைவிடங்கள் குறித்த பார்வையாக இருக்கின்றது. \\

காத்திருக்கிறோம் தல ;)

Anonymous said...

தெளிவான படங்களுடன் வரலாற்றை நல்லா சொல்றீங்க. இந்த மன்னர்களின் நினைவிடங்கள்னா பெரும்பாலும் கோயில்கள்தான் போல இருக்கு. அடுத்த பகுதில விரிவா எழுதுங்க‌

கானா பிரபா said...

//கோபிநாத் said...
மன்னர்கள் அனைவரும் பக்திமான்கள் போல!!//


ஆமாம், சைவம், வைணவம், பெளத்தம் ஆகிய மதங்களைக் காலா காலமாக இவர்கள் பின்பற்றியிருக்கின்றார்கள். வருகைக்கு நன்றி தல

கானா பிரபா said...

//சின்ன அம்மிணி said...
தெளிவான படங்களுடன் வரலாற்றை நல்லா சொல்றீங்க. இந்த மன்னர்களின் நினைவிடங்கள்னா பெரும்பாலும் கோயில்கள்தான் போல இருக்கு. அடுத்த பகுதில விரிவா எழுதுங்க‌//

வணக்கம் சின்ன அம்மணி

மன்னர்களின் நினைவிடங்களாகக் கோயில்கள் தவிர்த்த வேறு இடங்களும் உள்ளன. ஆனால் ஒரு சிலவே தற்போது எஞ்சியிருக்கின்றன. அவை பற்றி நிச்சயம் தொடரும் பதிவுகளில் தருவேன்.

ஆ.கோகுலன் said...

மன்னர்களின் பெயர் எல்லாம் தமிழ்பெயராக இருக்கின்றது. அந்தக்காலத்தில் என்ன மொழி பேசினார்களாம்?

கானா பிரபா said...

வணக்கம் கோகுலன்

இந்த மன்னர்கள் தென்னிந்தியா வழி வந்தவர்கள் என்பதற்கு பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் தமிழில் எந்த விதமான சுவடுகளும் கண்ணிற்படவில்லை. எல்லாமே சமஸ்கிருதம் தான். பிற்கால மன்னர்கள் கம்போடிய நாட்டு மொழியையே பின்பற்றியிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

ஆ.கோகுலன் said...

பல்லவர் காலத்தில் இந்தியாவில் பிராகிருத மொழியும் செல்வாக்காக இருந்தது என்று கல்கி குறிப்பிட்டதாக ஞாபகம். பிராகிருதமும் தமிழும் கலந்தே கன்னட மொழி உருவாகியது. எம் வழக்கிலும் விதண்டாவாதம் செய்பவர்களை 'என்ன கிருதம் கதைச்சுக்கொண்டிருக்கிறாய்' என கேட்பது வழக்கம். கம்போடியாவிலும் இம்மொழியின் தாக்கம் இருந்திருக்கலாம்.

கானா பிரபா said...

கோகுலன்

உங்கள் பின்னூட்டத்தை தவறவிட்டு இப்போது தான் கண்ணுற்றேன், உங்கள் தகவல்களுக்கு நன்றி