Social Icons

Pages

Sunday, August 24, 2008

ஏழாம் ஜெயவர்மனின் Banteay Kdei ஆலயம்

அங்கோர் வாட் ஆலயம் சென்ற பதிவுகளைப் போட்டிருந்து பின்னர் சற்று இடைவெளி விட்டு கம்போடிய நடனம் கண்ட அனுபவத்தை போன பதிவில் எழுதியிருந்தேன். வாரம் ஒருமுறைக்காவது கடமையுணர்ச்சியோடு இப்பதிவுகளை எழுதி முடிக்கவேண்டும் என்ற அவா, சில பல காரணங்களால் தள்ளிப் போய் ஒருமாதமாகிவிட்டது. அடுத்த இரண்டு பதிவுக்காகவும் எடுத்த படங்களை தேர்வு செய்து வைத்துவிட்டேன் என்பதால் தொடர்ந்து தடங்கல் இருக்காது என்று நினைக்கின்றேன்.

அங்கோர் வாட் ஆலயம் சென்று சுற்றிப்பார்த்து மீளவும், நண்பகல் சூரியன் நடு உச்சியில் நின்று விக்ஸ் மருந்துக்கு வேலை வைத்தான். சுற்றுலா வழிகாட்டியுடன், காத்திருந்த ருக் ருக் வண்டிக்காரரையும் அழைத்துக் கொண்டு போய் மதிய உணவை எடுக்கப் போனேன். அங்கோர் வாட் ஆலயத்தினை ஒட்டிய சில நிமிடத் தூரத்தில் பெரியதொரு உணவகம் தென்பட்டது. சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து ஓலைகளால் வேயப்பட்டதொரு உணவகம் அது. என்னோடு சேர்ந்து ஒரே மேசையில் இருந்து சாப்பிடலாம் என்று நான் வழிகாட்டியையும், வண்டிக்காரரையும் வேண்டினேன். வழிகாட்டியோ "இப்படியான உணவகங்களின் தங்களுக்கென்று இன்னொரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கே சகாய விலையில் உணவைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே நீங்கள் மட்டும் போங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்" என்று சொல்லவும், இருவருக்குமான உணவுச் செலவுக்காக சில டொல்ர்களைக் கொடுத்தேன். அவர்கள் நகரவும், தனியே தன்னந்தனியே மேசையொன்றில் இருந்து உணவுப் பட்டியலைப் பிரித்தேன். தேடிப்பிடித்து எனக்குப் புழக்கமான உணவையும், பெப்சியையும் ஓடர் செய்தேன். கம்போடியாவில் உணவு விஷயத்தில் ரிஸ்க் எடுப்பது எவ்வளவு அபாயம் என்பதை பின்னர் ஒரு தனிப்பதிவில் சொல்கின்றேன்.

மதிய உணவு முடிந்து மீண்டும் எங்கள் தல யாத்திரை தொடர்ந்தது. அடுத்து நாம் சென்ற ஆலயம் பன்டே கெடே( Banteay Kdei ). இது கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 13 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்துக்கும் இடையில் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஏழாம் ஜெயவர்மனால் (Jeyavarman VII) இவ்வாலயம் எழுப்பப்பட்டது. முழுமையானதொரு பெளத்த ஆலயமாக விளங்கும் இவ்வாலயம் Angkor Wat/Bayon என்ற கட்டிடக் கலை அமைப்பில் அடங்குவதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.


இந்த Banteay Kdei ஆலயம் ஏழாம் ஜெயவர்மனால் எழுப்பப்பட்ட ஆலயமான Ta Prohm இற்கு தென்கிழக்காகவும், அதே மன்னனால் எழுப்பப்பட்ட Angkor Thom இற்கு கிழக்கு முகமாகவும் அமைந்திருக்கின்றது. Banteay Kdei என்றால் "Citadel of the Cells" என்ற பொருள்படும்.
நான் இனிமேல் தரப்போகும் Ta Prohm என்ற ஆலயத்தின் வடிவமைப்பை ஒத்ததாக இது சொல்லப்படுகின்றது. இதனை ஆலயம் என்று வகுப்பதை விட, ஏழாம் ஜெயவர்மனால் பெளத்த சன்னியாசிகளுக்காக உருவாக்கப்பட்ட மடாலயம் என்று கூறினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஆலயமுகப்பிலேயே பெளத்த சன்னியாசிகள் தங்கும் பர்ணசாலை அமைந்துள்ளது.
முன்னொரு காலத்திலே ஆலயச் சூழல் சிறப்பாக இருந்தது என்பதற்கு அடையாளமாக வரண்டு பள்ளமான பெரியதொரு நீர்ச்சுனையின் சுவடு தெரிகின்றது. அடந்த சோலைகளின் மத்தியிலே, தற்சமயம் இவ்வாலயத்தைச் சூழ எந்தவொரு குடியிருப்புக்களும் இல்லாத பகுதியாக இருக்கின்றது.

Banteay Kdei ஆலயத்தைப் பொறுத்தவரை Bayon என்ற சிக்கலான கட்டிடக்கலையைப் பயன்படுத்தியிருப்பது அழிந்தாலும் சிதைந்தாலும், இப்போதும் எஞ்சியிருக்கும் கட்டிட அமைப்பு உறுதிப்படுத்துகின்றது. கட்டிடத்தின் உள்ளமைப்பைப் பொறுத்தவரை சலவைக்கல்லை உபயோகித்து வடிவமைத்திருந்தாலும், கட்டும்போது பயன்படுத்தப்பட்ட கட்டிடக்கலைத் தொழில்நுட்பம் மிகவும் பலவீனமானது என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்போது சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து கம்போடியாவின் அழிந்துபோன ஆலயங்களைப் புனரமைத்துக் காட்சிப் பொருளாக்கும் தோரணையில் இந்தக் கட்டிடத்தையும் புனர்நிர்மாணம் செய்து வருகின்றார்கள். அதற்கு அடையாளமாக உள்பகுதியில் உள்ள சில வாசல்கள் அடைக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டியிருக்கின்றது. பொதுவாகவே கம்போடிய ஆலயங்களின் நுளைவாயிலில் இருமருங்கிலும் நாக தலை பொருந்திய வாயிற்புறங்கள் இருக்கும். அவை மூன்று, ஐந்து, ஏழு என்று இடத்துக்கிடம் வித்தியாசப்பட்டிருக்கும். இதில் ஒரு சுவையான தகவல் என்னவென்றால் மூன்று அல்லது ஐந்து தலை நாகம் உள்ள வாயில்கள் இந்துக் கோயில்களாகவும், ஏழு தலை நாகம் உள்ள கோயில்கள் பெளத்த கோயில்களாகவும் கணிக்கப்படுகின்றன.
மேற்படம்: ஆலய உள்ளமைப்பில் இயற்கையாகவே வெளிச்சம் வருவதற்காக குடைந்துருவாக்கப்பட்ட அடுக்குகள்.
மேற்படம்:ஆலயத்தின் பின் பக்க வாசல் ழாம் ஜெயவர்மனைப் பொறுத்தவரை ஆலயங்களை எழுப்பி ஆலயத்தை தன் தாய், தந்தை, தனக்காக அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது. அதுபற்றிய உதாரணக் கோயில்கள் பின்னர் வரும். ஆனால் Banteay Kdei ஆலயம் இவனால் யாருக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்ற விபரம் இதுவரை தெளிவாக்கப்படவில்லை.

ஆலயத்தின் சீரற்ற கட்டிட அமைப்பு ஒருபக்கம் இருக்க, பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதங்களுக்கிடையிலான பிணக்குகளால் அழிவுற்ற ஏழாம் ஜெயவர்மன் ஆலயங்களுக்கு உதாரணமாக இந்த Banteay Kdei ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களும் சான்று பகிர்கின்றன.

நன்றி: என்னோடு கூடவே வந்து தகவல்களை அளித்த வழிகாட்டி மற்றும் கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புக்கள்.

19 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டூ :))

ஆயில்யன் said...

கடும் பணிக்களுக்கிடையில் மீண்டும் அப்பாலிக்கா ரிட்டர்ன் வர்றேன் :))

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\
மீ த பர்ஸ்டூ :))
\

இத நான் சொல்லணும்னு இருந்தேன்...

தமிழன்-கறுப்பி... said...

எனக்கு அனுராதபுரம், பொலநறுவை பாத்த ஞாபகம் வருது அண்ணன் படங்களை பாக்க..

தமிழன்-கறுப்பி... said...

///Banteay Kdei ///

இந்த சொல்லுக்கு என்ன அர்த்தம் அண்ணன்....

Anonymous said...

அதிசயம்..அழகாக இருக்கு :)

கானா பிரபா said...

ஆயில்யன்

சாவகாசமா வாங்க, பதிவு இங்கேயே இருக்கும் ;)

M.Rishan Shareef said...

படங்களுடனான கட்டுரை அருமை.
படங்களில் தெளிவு குறைவு போல ஒரு தோற்றம். பிக்காஸாவில் கொஞ்சம் வேலை பார்த்திருக்கலாம் . :)

M.Rishan Shareef said...

கம்போடியோச் சாப்பாட்டைப் பற்றிச் சீக்கிரம் சொல்லுங்கோ. பாம்புக் கறி ஏதாச்சும் சாப்பிட்டுவிட்டீங்களோ ? :P

கானா பிரபா said...

தமிழன்

Banteay Kdei என்றால் "Citadel of the Cells" என்ற பொருள்படும். அதாவது சிறுபாகங்கள் உடைய கோட்டை என்று தமிழாக்கலாம்.

Anonymous said...

அந்த ஒன்பதாவது படம் பாம்புவாயிலா?

கானா பிரபா said...

//Thooya said...
அதிசயம்..அழகாக இருக்கு :)//

Thanks Thooya

Mahesh said...

அட அட ... ரொம்ப நல்ல பயணப் பதிவு. எல்லா பதிவுகளையும் படிக்கும்போது, நான் 2 வருடம் முன்பு அங்கோர் வாட் போய் வந்தது ஞாபகம் வந்தது. அத பத்தி http://mindbloggermax.blogspot.com ல பதிஞ்சுருக்கேன். ஆனா ஆங்கிலத்துல. இப்பொ மறுபடி ஒரு முறை போக திட்டம் இருக்கு, இந்த முறை தமிழ்ல பதியணும்.

கானா பிரபா said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
படங்களுடனான கட்டுரை அருமை.
படங்களில் தெளிவு குறைவு போல ஒரு தோற்றம். பிக்காஸாவில் கொஞ்சம் வேலை பார்த்திருக்கலாம் . :)//

வாங்கோ ரிஷான்

கொஞ்சம் போஸ்ட் புரடக்க்ஷன் செய்தேன், சொதப்பீட்டுது போல ;)
பாம்புக்கறி சாப்பிட்டா இப்படி இருப்பனே, என்னக் கொடும சார்

கானா பிரபா said...

//சின்ன அம்மிணி said...
அந்த ஒன்பதாவது படம் பாம்புவாயிலா?//

வாங்க சின்ன அம்மணி

நாகபாம்புகள் குறித்த விளக்கத்துக்கு மேலே இருப்பது ஒரு பக்க பாம்பு வாயிலின் தோற்றம், இன்னொரு கோயிலில் பிரமாண்டமான தோற்றத்தில் இருப்பதைப் பின்னர் தருகின்றேன்.

கானா பிரபா said...

//Mahesh said...
அட அட ... ரொம்ப நல்ல பயணப் பதிவு. எல்லா பதிவுகளையும் படிக்கும்போது, நான் 2 வருடம் முன்பு அங்கோர் வாட் போய் வந்தது ஞாபகம் வந்தது.//

வாங்க மகேஷ்

நீங்களும் அங்கோர் வாட் போனது அறிந்து மகிழ்கின்றேன், உங்களுடைய இணைப்பையும் வாசிக்கின்றேன். மிக்க நன்றி

கோபிநாத் said...

தல

பயணம் கலக்கல்...ஆமா என்ன படங்கள் எல்லாம் சின்னதாக இருக்கு!!??

எல்லாம் ரோமாயணம் பயமா!! ;))

கானா பிரபா said...

வாங்க தல

ரோமாயணத்துக்கு பயந்தா? இது என்ன புது வெடி ;)

J S Gnanasekar said...

பான்டேய் க்டேயில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:

https://goo.gl/photos/GDGnYjc6JEmbjwFq8

- ஞானசேகர்